Author: ஜெயகாந்தன்
•18:09
Share

வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்ப்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை.
-மனசே மனசே கதவைத்திற.



இந்த உலகம் தந்திரமுள்ள உலகம். இதில் நல்லது கெட்டது, சரி தவறு என்று எதுவுமில்லை. தந்திரத்தோடு இருப்பது சில சமயம் வெற்றியிலும் கூட முடயும். ஒரு விஷயத்தின் முடிவு தந்திரத்தில் இல்லை. அது இறைவன் கையில் இருக்கிறது. நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே இரு. எல்லோரும் மற்றவர் விருப்பத்தில் இருக்கிறார்கள். நீ என்ன படிக்க வேண்டும் என்னவாக மாறவேண்டும் என்று உன்னை கேட்டுக்கொள்.
-மனசே மனசே கதவைத்திற.

மனிதனுக்கு ஞாபக சக்தி இருக்கிறது என்பது பொய். முழுமையாய் ஒரு விஷயத்தை மனிதன் ஞாபகப்படுத்திக் கொள்வதே இல்லை. ஒரு விஷயத்தினால் ஏற்பட்ட தகிப்பை உணர்வுகளை நெஞ்சில் பதித்துக் கொள்வதே இல்லை. மறதி அதிகமிருக்கிற ஒரு பிராணியாகத்தான் மனிதன் உலா வருகிறான். தன் பாதிப்பை, துக்கத்தை எளிதில் மறந்துவிட்டு மறுபடியும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறான்.
-மனசே மனசே கதவைத்திற.

நம்ம மனசுதான் கோட்டை. நம்ம புத்திதான் காவல்.நம்ம தெளிவுதான் வெளிச்சம். நல்லா இருக்கணும்னு உண்மையா ஆசைப்படறவன் தப்பு பண்ணமாட்டான்.
-ராஜாமணி வத்சலாவிடம்,வில்வ மரம்.

கற்பனையில் இறங்குவது சுகம்தான். தானே தன் தத்துவங்களை அடுக்கிக் கொண்டு போவது இயல்புதான். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு இளைஞனும் யுவதியும் என்ன செய்ய வேண்டும்?
சட்டென்று ஒரு கட்டத்தில் தன் கற்பனைகளை கணக்குகளை நிறுத்தி தான் யோசிப்பது சரியா என்று கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நீ சரியாகச் சிந்திக்கிராய இல்லை உன் விருப்பத்திற்கேற்ப உன் யோசனைகளை வளர்க்கிறாயா. இதை எதிர்பதமாக யோசித்துபார். இந்த பெண்ணை என்னவென்று தெரியாமல் எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இவள் வீட்டு பின்புலம் தெரியாமல் நாம் மனம் பரி கொடுத்தால் என்ன ஆவது. எனக்கு இப்போது யார் முக்கியம் இந்த பெண்ணா அல்லது என்னை இதுவரை போற்றி வளர்த்த வீடா என்று யோசிக்க வேண்டும்.
எவன் இவ்வாறு சிந்திப்பை திசை மாற்றுகிறானோ, எதிர்பக்கமும் போய் யோசிக்கிறானோ முழுமையாய் சிந்திக்கிறானோ, அவனுக்கு வெற்றி வாய்ப்பு அருகில் இருக்கிறது.
-மனசே மனசே கதவைத்திற.

தற்கொலை கோழைத்தனம். வாழ்தல் விவேகம். காதல் பொருட்டு தன்னை மாய்த்துக்கொள்ள நினைப்பவன் சுயநலம். எனக்கு எத்தனை துக்கம் பார் என்று காட்டுகிற தான் தோன்றி அலட்டல். பழி வாங்கும் ஊமைக் குசும்பு. மரணமும் அவனுக்கு விடுதலை தராது. காதலில் ஜெயிப்பது என்ன என்று புரிகிறதா? யோசியுங்கள் புர்யும். வயசு விவேகம் தரும். தரவேண்டும்.
-இனிது இனிது காதல் இனிது.

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4
This entry was posted on 18:09 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On February 14, 2010 at 12:37 PM , Dheepa Ranganathan said...

miga nalla vishayam seithirukireergal.. naan romba naal virumbiya vishayam.. seyya ninaittha vishayamum ithuthan. balavin padaippugal nirantharamaanavai. marupadi marupadi balavai paditthukonde irukkiren.. purinthukonde irukkiren.. illa vittal.. en vazhvil itthanai dhukkathirku pinbum.. avamanatthirku pinbum.. naan uyirodu irunthirukave mudiathu. bala en thagappan.. snehithan.. ippothu guruvanavar.
love you bala..
en magan harish gowtham ennai vittu pirinthirukiraan.. silarudaiya thandhirangalal. en kuzhanthai ennidam vara enakaha oru nimidam praarthithu kollungal bala. intha vidhavai ammavin vedhanai unarthu avan vara vendum.

Dheepa
Udumalpet.

 
On February 14, 2010 at 5:30 PM , Jayakanthan R. said...

Thank you for ur comment Mrs.Dheepa Ranganathan and everything will be fine...God bless you...

with regards
Jaikanth R.