Author: ஜெயகாந்தன்
•17:05
Share
நம்புவதால் ஏற்படுகிற பயமின்மையும், பயமின்மையால் ஏற்படும் சந்தோஷமும், சந்தோஷத்தால் ஏற்படும் உறுதியும் மனிதனுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் கம்பிரத்தைக் கொடுத்துவிடுகின்றன. அப்பட்டமான தோல்வியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்க வைத்துவிடுகின்றன.
-திருபூந்துருத்தி.

தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.தோல்வி வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி, அது வந்துவிட்டபோது ஏற்படும் மனத்துவளலே முக்கியமான விஷயம்.



நம்பிக்கை உள்ளவருக்கு மனத்துவளல் ஏற்படாது.துவளல் இல்லாத வாழ்க்கை சந்தோஷமானது.
-திருப்பூந்துருத்தி.

பலமுள்ளவர்கள் பலகீனர்களைப் பார்த்துக் கத்துவதே கோபம். பலம் உள்ளவன் பலம் குறைந்து பலகீனர்கள் அதிகரிக்கும்போது அந்தக் கோபதுக்குரிய மரியாதை கிடைத்துவிடுகிறது.
-திருப்பூந்துருத்தி.

ஆசை என்கின்ற மது அருந்தி அல்லாட்டம் போடும் மனிதர்களிடையில் ஆசையற்று இருப்பவன் தெளிவுள்ளவன்.
-திருப்பூந்துருத்தி.

எவனொருவன் தன்னுள் தன்னைக் காண்கிறானோ அவனுக்குப் பழம் நினைவுகள் வரும். எவனொருவனுக்குப் பழம் நினைவுகள் வருகின்றனவோ அவன் இன்னமும் உள்ளே போகமுடியும்.
-திருப்பூந்துருத்தி.

உபதேசிப்பது எளிது. உபதேசத்தைப் புரிந்துகொள்வதுதான் கடினம்.புரிந்து கொள்ளுதலையும் ஜென்ம ஜென்மமாய்ப் பழகவேண்டும். இப்போது ஆரம்பித்தால்தான் பின்வரும் காலங்களிலாவது பிறப்பு அறும்.
-திருப்பூந்துருத்தி.

ஆசையக் கிள்ளி எரிய வியாதியில்லை. காமத்தைக் கிள்ளி எறிய பிறவி இல்லை. இரண்டும் ஒன்றே.
-திருப்பூந்துருத்தி.

வயது என்பது அனுபவம்.அனுபவம் என்பது நடந்த நிகழ்வுகளிலிருந்து புத்திக்கு வரும் தெளிவு. தெளிவின் வெளிப்பாடு அமைதி.
-இனிது இனிது காதல் இனிது.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4
This entry was posted on 17:05 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On October 12, 2009 at 10:33 PM , நிகழ்காலத்தில்... said...

பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களில் வாழ்க்கையில் உன்னிப்பாய் கவனித்து பின்பற்ற வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கும்,

அதை தேர்ந்தெடுத்து தாங்கள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியே

தொடரட்டும் பணி

வாழ்த்துக்கள்

 
On October 13, 2009 at 9:41 AM , Jayakanthan R. said...

உங்கள் உற்சாகமூட்டுதலுக்கு நன்றி...

 
On April 8, 2010 at 10:26 AM , Ladha said...

hi friends..
you are doing a very great job...
Keep it up..