Author: ஜெயகாந்தன்
•11:02

தவம் என்பது ஒருமுகப்பட்ட சிந்தனை.--கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.

உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -ப்ரகலாதன்,கதை கதையாம் காரணமாம்.

Author: ஜெயகாந்தன்
•11:02
ஒரு சக்தி வாய்ந்த குரு, உடம்புக்கப்பால் நம்மை அழைத்துப் போய்விடுகிறார். அவருடைய மனோசக்தியினால், நம் மனோசக்தியை அதிகரிக்கிறார். உலுக்கி எழ வைக்கிறார்.
-குரு.

அன்பைச் சொல்ல வேண்டாம. செயலாக்க முயற்சிக்க வேண்டாம். அன்பாகவே மாறிவிடுதல் அன்பை எளிதில் உணர்த்திவிடும்.இன்னும் திடமாய் உணர்த்திவிடும்.
-குரு.

வாழ்வு விட்டுக்கொடல். விட்டுக்கொடல் புரிதலின் முதல் செயல்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

Author: ஜெயகாந்தன்
•10:54
மரணம் பயம்.தனிமை தரும் பயம்.தனிமை என்பது மரண பயம்.
-இனிது இனிது காதல் இனிது - 1.

திருமணம் என்பது நம்பிக்கை.பரஸ்பர நம்பிக்கை.அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல்,ஆரவாரமற்ற அன்பு முக்கியம்.நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது.
-இனிது இனிது காதல் இனிது - 1.

மனிதன் உடலால் ஆனவன்.மனசால் வாழ்பவன்.இவை இரண்டும் பிரிக்க முடியாதவை.புறக்கணிக்க முடியாதவை. புறக்கணிக்க பிரிக்க விபரீதம் நிகழும்.
-இனிது இனிது காதல் இனிது - 1.

Author: ஜெயகாந்தன்
•10:44

மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.

மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.

அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.

Author: ஜெயகாந்தன்
•08:20
ஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்றகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாலகுமாரன். பள்ளி இறுதி வகுப்புவரை தேறிய பாலகுமாரன், சுருக்கெழுத்தாளராக வாழ்கையைத் தொடங்கி, பிறகு பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் வெகுஜனத் தன்மையோடு கவிதைகள் எழுதத் துவங்கிய இவர், வெகுஜன சிறுகதைகள் எழுதுவதில் மடைமாறி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். எண்பதுகளில் தமிழ் வெகுஜன நாவல் எழுத்தானது, ஒருதரமற்ற- தட்டையான- உள்ளீடற்ற குற்றக் கதைகளின் வணிக எழுத்தாக மலிலிந்துகிடந்த நேரத்தில், எல்லாருக்குமான எளிய உளவியல் பார்வை கொண்ட நூற்றுக்கும்மேற்பட்ட சமூக, குடும்பக் கதைகளை மிகுபுனைவு நாவல் களாக எழுதி,சுஜாதாவுக்கு இணையாக தமிழ் வெகுஜன வாசகர் பரப்பின் ரசனையை ஒருபடி மேம்படச் செய்தவர் பாலகுமாரன். இவரது எழுத்துக்கள் தமிழ் வெகுஜன வாசகனை நவீன வாசிப்புக்குக் கொண்டு வந்து சேர்த்த படிக்கட்டுகள் என்ற மதிப்பீடு தீவிரவாசகர்கள் மத்தியில் உண்டு.
Author: ஜெயகாந்தன்
•12:16
"இரும்பு குதிரைகள்" கவிதைகள்.
                                                                                                     

"சவுக்கடிபட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை கண்மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகம்தானென்று கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்க வேண்டாம் கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்"
                                                                                                     
"நிலம் பரவி கால்கள் நீட்டி கன்னத்துப் பக்கம் அழுந்த குதிரைகள் தூங்குவதில்லை ஏனைய உயிர்கள் போல நிற்கையில் கண்கள் மூடி களைப்பினைப் போக்கும் குதிரை தொட்டதும் விழித்துக் கொள்ளும் தொடுதலைப் புரிந்து கொள்ளும் தூங்குதல் பெரிய பாவம் தூங்கவா பிறந்தீர் இங்கு? வாழ்வதோ சிறிது நாட்கள் அதில் சாவினை நிகர்த்த தூக்கம் புரிபவர் பெரியோர் அல்லர் வாழ்பவர் தூங்க மாட்டார். குதிரைகள் கண்கள் மூடி குறி விரித்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சகட்டம் நெற்றிக்குள் சந்திரபிம்பம்"
                                                                                                     
Author: ஜெயகாந்தன்
•19:29
எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும். -கற்பூர வசந்தம்.

பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். -கற்பூர வசந்தம்.

கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு. -கற்பூர வசந்தம்.

தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது. -கற்பூர வசந்தம்.

Author: ஜெயகாந்தன்
•20:20
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.

நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை. -கற்பூர வசந்தம்.

Author: ஜெயகாந்தன்
•21:00
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -வெற்றி வேண்டுமெனில்-2.

மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம். -வெற்றி வேண்டுமெனில் -2.