Author: ஜெயகாந்தன்
•11:02
Share

தவம் என்பது ஒருமுகப்பட்ட சிந்தனை.--கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.

உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -ப்ரகலாதன்,கதை கதையாம் காரணமாம்.


ஒருமைப்படுதலும் தூக்கமும் அருகருகே உள்ள விஷயங்கள் - கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.

கர்வமுள்ளவர்களால் சாதரண மக்களைக்கூட புரிந்து கொள்ள இயலாது.-கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்

இளமை நேரத்தில் 'முதுமை என்றால் என்ன' என்று யோசிப்பது எல்லோருக்கும் கிடைக்காது. கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.-யயாதி,கதை கதையாம் காரணமாம்

துன்பம் நேரும்போது இறைநினைப்பை பலபபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். இதற்க்கு பக்திதான் எளியவழி.பக்தி என்பது பாசாங்கற்ற எளிமை.-அம்பரீஷன், கதை கதையாம் காரணமாம்.

மனம் முழுவதும் இறையில் ஒன்றிக்கிடப்பவனுடைய தினசரி வாழ்க்கை இறைவனால் நடத்தப்படும்.-அம்பரீஷன்,கதை கதையாம் காரணமாம்.

தன்னை அறிந்தவன் மரணத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை.அவனால் மரணத்தை தள்ளி வைக்கவும் கூடும். - சக்கரவாஹம்.

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.--என் கண்மணித்தாமரை.

காமம் அமிர்தம். அமிர்தம் என்பது ஒருவகை மருந்து. அளவு மிஞ்சக்கூடாது. அடிக்கடி உண்ணக்கூடாது.- என் கண்மணித்தாமரை.

மனம் ஒரு மோசமான மிருகம். அது மயங்கி இருக்கும்போதே ஒரு கடிவாளம் போட்டு விட வேண்டும்.-என் கண்மணித்தாமரை

இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீது தான் - என் கண்மணித்தாமரை.

தியானத்திற்கு அடிப்படை பக்தி, பக்திக்கு அடிப்படை பணிவு. பணிவுக்கு ஆதாரம் சத்சங்கம். நன்மக்கள் கூட்டம் - என் கண்மணித்தாமரை

கடவுள் அறியாதவன்தான் கடவுளை இழிவு படுத்துவான். தன் மதத்தை அறியாதவன்தான் பிறர் மதத்தை கேலி செய்வான்.- என் கண்மணித்தாமரை.

குரு என்பதும் கடவுள் என்பதும் வெவ்வேறல்ல.கடவுளின் நேரடியான ரூபம் குரு.-குரு வழி.
This entry was posted on 11:02 and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: