Author: ஜெயகாந்தன்
•10:54
Share
மரணம் பயம்.தனிமை தரும் பயம்.தனிமை என்பது மரண பயம்.
-இனிது இனிது காதல் இனிது - 1.

திருமணம் என்பது நம்பிக்கை.பரஸ்பர நம்பிக்கை.அந்த நம்பிக்கை வர ஆழ்ந்த காதல்,ஆரவாரமற்ற அன்பு முக்கியம்.நேசம் உண்மையெனில் ஆடாது, அதிராது, ஆவேசப்படாது.
-இனிது இனிது காதல் இனிது - 1.

மனிதன் உடலால் ஆனவன்.மனசால் வாழ்பவன்.இவை இரண்டும் பிரிக்க முடியாதவை.புறக்கணிக்க முடியாதவை. புறக்கணிக்க பிரிக்க விபரீதம் நிகழும்.
-இனிது இனிது காதல் இனிது - 1.


ஏன் மிருகம் என்று மனிதனின் சில உணர்வுகளுக்கு பெயர் தரப்படுகிறது. மிருகமாகுதல் மட்டம் என்கிற விதமாய் பேசப்படுகிறது. ஆசைப்பட்ட பொருளை அடைவதுதான் மிருகத்தின் நோக்கமே ஒழிய, செய்முறைகள் பற்றி அதற்க்கு யோசனையே இல்லை. எதிர் கருத்து அறயும் சிந்தனை இல்லை.

தன்மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு பிறர் மீதும் நம்பிக்கை இல்லை. நீ காதலிக்கப்பட வேண்டுமெனில் காதலிக்க வேண்டும். காதல் என்ன என்பது அறிய வேண்டும். காதல் என்பது மதித்தல், விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம், எந்த எதிர்பார்ப்புமின்றி தான் விரும்பிய வண்ணமே தன் சந்தொஷத்திர்கென்றே பிறர் வளைவர்கள் என்று எதிர்பார்ப்பதில் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏமாற்றம் சினம் தரும், சினம் வஞ்சனை உருவாக்கும், வஞ்சனை பொய் சொல்லும், வன்முறை காட்டும், வன்முறை வன்முறையால் சந்திக்கப்படும். பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான்.

தன்னை அகௌவ்ரவப்படுத்திக்கொள்வது காதலல்ல. தன்னைத்தானே ஹிம்சித்துக்கொள்வது நேசமல்ல.
-இனிது இனிது காதல் இனிது -2.

தொடல் ஒரு பாஷை. தொடல் ஒரு மொழி.மிக அற்புதமான மொழி. தொடவும் தொடலைப் புரிந்து கொள்ளவும் சற்று நிதானம் தேவை. நிதானம் இல்லாமல் தொடும்போதுதான் பிரச்சினை வந்துவிடுகிறது.
-பாலகுமாரன் பதில்கள், ராஜ கோபுரம்.

கர்வமற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.அஹங்காரப்படுவதால் மற்றவிஷயங்களைப் பார்ப்பது,மற்ற மனிதர்களை அறிவது குறை பாடாய்ப் போய்விடும்.அறியவேண்டியதை அறியாமல் தவறாய்ப் புரிந்து கொள்ள நேரிடும்.
-கடலோரக் குருவிகள்.

இன்னொரு விஷயம் முக்கியம்,கர்வமற்று இருத்தலை போலியாக செய்துவிடுதல் ஆகாது. இதைவிட கர்வப்பட்டு கிடப்பது உத்தமம்.
-கடலோரக் குருவிகள்.

தன் முயற்சிகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற, தன் நெஞ்சின் அடி ஆழத்தில் இருக்கின்ற, ஒரு மகோன்னத சக்தியை உணர்ந்து நிற்றலே கடவுள் நம்பிக்கை.
-கடலோரக் குருவிகள்.
This entry was posted on 10:54 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: