Author: ஜெயகாந்தன்
•11:02
Share
ஒரு சக்தி வாய்ந்த குரு, உடம்புக்கப்பால் நம்மை அழைத்துப் போய்விடுகிறார். அவருடைய மனோசக்தியினால், நம் மனோசக்தியை அதிகரிக்கிறார். உலுக்கி எழ வைக்கிறார்.
-குரு.

அன்பைச் சொல்ல வேண்டாம. செயலாக்க முயற்சிக்க வேண்டாம். அன்பாகவே மாறிவிடுதல் அன்பை எளிதில் உணர்த்திவிடும்.இன்னும் திடமாய் உணர்த்திவிடும்.
-குரு.

வாழ்வு விட்டுக்கொடல். விட்டுக்கொடல் புரிதலின் முதல் செயல்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

இடைவிடாமல் கற்றுகொள்பவருக்குத்தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

உலகத்தில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி தங்களுக்குத் தெரியவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களால் தான் கற்றுக்கொள்ள முடியும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

சொல்லிக்கொடுப்பவனை விட கற்றுக்கொள்பவனுக்குதான் ஞானம் வேண்டும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.

ஆசை நிற்க கற்றல் நிற்கும்.கற்றல் நிற்பதே அமைதியான நிலை.இந்த அமைதியே உத்தமம். இதுவே நிறைவு.ஆனால் கற்றல் எப்போது நிற்கும்? கற்றபிறகே. ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே.

யார் சுயமான சிந்தனையோடு எந்நேரமும் விழிப்போடு இருக்கிறார்களோ அவர்களே தலைமையேற்க முடியும். இந்த உணர்வு இருந்தால் தான் நாம் கடவுளை அறிதலோ, கருணையோடு இருத்தலோ, நல்லது செய்தலோ,செய்யாதிருத்தலோ முடியும். இதுவே நம் முதல் குணமாக இருத்தல் வேண்டும்.
-காசும் பிறப்பும் - 2.

மனிதர் மனிதரை நம்புவதும், மனிதர் கடவுளை நம்புவதும் நம்புவதும் ஒன்றே. எதை நம்புகிறோம் என்பது முக்கியமில்லை.நம்பிக்கை என்பதே இங்கு முக்கியம்.
-திருபூந்துருத்தி.
This entry was posted on 11:02 and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On December 15, 2010 at 12:45 PM , VELU.G said...

நல்ல கருத்துக்கள்

 
On December 17, 2010 at 2:06 PM , ஜெயகாந்தன் said...

VELU.G said...
நல்ல கருத்துக்கள்//

nandri Mr. Velu.

 
On July 11, 2013 at 2:49 PM , Unknown said...

ayya vanakkam,

thangalin aasi vendum, enaku aanmiga munnetram adaya

nandri

raajesh aadityaa
tiruchengode