Author: ஜெயகாந்தன்
•11:02
Share
ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம்.வளர்ச்சிக்கு குரு காரணம்.- குரு வழி.

குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.

எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.



பிறப்பும் இறப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. இவை எப்போது எங்கே நிகழும் என்று தெரியாத வேதனைதான் மனிதனை மதம் என்கிற ஊன்றுகோல் தேடவைக்கிறது. கடவுள் என்கிற கானல் நீர் நோக்கி போக வைக்கிறது.
-சுக ஜீவனம்

கோபத்தாலோ, வெறுப்பினாலோ, அன்பினாலோ காதலினாலோ நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.-பட்டாபிஷேகம்.

காமத்தால் உந்தப்பட்ட போது எல்லா அபத்தங்களும் ஞாயப்படுதப்படும். -பட்டாபிஷேகம்

காமம் மறைமுகமாய் பல்வேறு பொய்களோடு கலந்து வருவதால்தான், அதைக்கண்டு சாதுக்களும் ஞானிகளும் மிரண்டு ஒதுங்குகிறார்கள்.-பட்டாபிஷேகம்.

காமம் என்கிற உணர்வு புலி போல் மனிதர்கள் மீது பாய்ந்து அவர்களை உண்ண ஆரம்பித்து விடுகிறது.-பட்டாபிஷேகம்.

ஒருவர் பேசவும் எழுதவும் செய்கிறவரை அவருக்கு ஞானம் வரவில்லை என்பதே பொருள்.- பாலகுமாரன் பதில்கள்,பட்டாபிஷேகம்

அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை.

இறைவனுடைய எல்லா செயல்களும் விளையாட்டுத்தான்.விளையாட்டாய் உணர்த்தப்பட்ட வேதம்தான்.புரிந்துகொள்ளத்தான் பொறுமை வேண்டும்.-ஒன்றானவன்,சிறுகதை.

எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி.

சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்.- திருபூந்துருத்தி.

மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்.-திருப்பூந்துருத்தி.

கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்.-திருப்பூந்துருத்தி.

"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
-பச்சை வயல் மனது

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 1
This entry was posted on 11:02 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On December 12, 2009 at 5:09 PM , சிகபாலன் said...

hi...nice work everything if nice...but

"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"

this one is not by bala....this one is kavingar kanadasan words...

 
On December 12, 2009 at 7:09 PM , Jayakanthan R. said...

Thank you for your information Mr. Balan

 
On November 20, 2010 at 10:39 AM , Nanthakumar said...

Dear Jayakanthan,

You have been doing a very very good job. I really appreciate this. I am a one of a fan to our evergreen ezhuchitthar Balakumaran.Thank you so much to you to show his face here.

Regards,
Nanthakumar

 
On November 20, 2010 at 5:16 PM , ஜெயகாந்தன் said...

Thank you Mr. Nanthakumar....

 
On January 23, 2012 at 11:28 AM , BALA ASOKAN said...

SIGABALAN THANKS A LOT
BY BALAKUMARA ASOAKN